Other News

நார்வேயில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றாரா பிரதமர் மோடி?

ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே சென்றுள்ள பிரதமர் மோடியிடம், உலகப் பத்திரிகை சுதந்திர குறியீடு குறித்து அந்நாட்டு பெண் செய்தியாளர் கேள்வி எழுப்ப முயன்றதும், அதற்கு பதிலளிக்காமல் பிரதமர் சென்றது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள நார்வேயில் உள்ள இந்திய தூதரகம், பிரதமரின் பயணம் தொடர்பாக தனியாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு வந்து செய்தியாளர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றும் […]

தவெகவை இபிஎஸ் உதாசீனப்படுத்தினார் – சி.வி.சண்முகம்

கடந்த சட்டசபை தேர்தலின் போது தவெக கூட்டணி அமைக்க அவர்கள் தயாராக இருந்தும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதை உதாசீனப்படுத்தி நிராகரித்தார் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி அமையக்கூடாது என்பதிலேயே இபிஎஸ் குறியாக இருந்தார் என்றும், அவர் யாரையும் அரவணைத்து செல்லவில்லை என்றும் இன்று (மே 19) செய்தியாளர் சந்திப்பில் அவர் குற்றம் சாடியுள்ளார்.

அதிமுக எனும் ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்.. இபிஎஸ்

அதிமுக எனும் ஆலமரத்தைச் சாய்க்க நினைப்பவர்கள் கீழே விழுந்து உருக்குலைந்து போவார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். மேலும், 5 கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான் என்றும், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தியுள்ளது என்றும் தவெக அரசை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

சிறிய படங்களுக்கு அரசு உதவ வேண்டும்: பார்த்திபன் கோரிக்கை

‘ஹபீபி’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பார்த்திபன், திரையுலகில் தியேட்டர்கள் கிடைக்காமல் போராடும் சிறிய மற்றும் நல்ல திரைப்படங்களை ஆதரிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். சினிமாவின் உச்சத்தில் இருந்து வந்து, தற்போது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் முதல்வர் விஜய், திரையுலகில் நலிவடைந்த நிலையில் இருக்கும் இத்தகைய படங்களுக்கு புதிய அரசு மூலம் தகுந்த உதவிகளை செய்ய வேண்டும் என அவர் நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார்.

கோவை சிறுவன் கொலை சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் வேதனை

கோவை இருகூர் அருகே 13 வயதுச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மனதைப் பதைபதைக்க வைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகளின் உளவியல் மாற்றங்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்கள் கல்வியோடு அன்பையும் பொறுமையையும் மாணவர்களிடம் விதைக்க வேண்டும் என்றும், வருங்காலமான குழந்தைகளைப் பாதுகாப்பது சமூகக் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எக்ஸ் தள பதிவு ஒன்றை இட்டு முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது “இதுதான் உங்களது “நாகரிக அரசியலா” முதல்வர் விஜய் அவர்களே! தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டு கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு தமிழ் வரலாறு மீது எவ்வளவு அலட்சியம் இருக்க […]

விசிக உயர்நிலைக்குழு அவசரக்கூட்டம் ரத்து

சென்னையில் நாளை நடைபெற இருந்த விசிக உயர்நிலைக்குழு அவசரக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு. ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டுள்ள நிலையில், நாளை நடைபெற இருந்த விசிக உயர்நிலைக்குழு கூட்டம் ரத்து

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை – ஈரான்

அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது குறித்து எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லலையென ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் அரசு ஊடகமான IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், தற்போதைய நிலவரங்கள் குறித்து மட்டுமே இந்த தகவல்கள் பரிமாறப்பட்டதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே இந்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை என்பதும் […]

பிரித்தானியாவில் ராக்கெட் வேகத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பிரித்தானியாவில் தொடர்ந்து 43 நாட்களாக உயர்ந்திருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தற்போது எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லையென வாகன அமைப்பான RAC தெரிவித்துள்ளது. வளைகுடா பகுதியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதுடன், மொத்த சந்தைகளிலும் எரிபொருள் விலைகள் சரிவடைந்துள்ளன. ஆனால், முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடும்போது விலைகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. பெட்ரோல் லீற்றருக்கு சுமார் 158 பென்ஸ் அளவில் விற்பனையாகிறது. டீசல் விலை லீற்றருக்கு […]

ஈரான் போர் இழப்பு 270 பில்லியன் டொலர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரான் அடைந்துள்ள பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்புகள் குறித்த முதற்கட்ட மதிப்பீடுகளை ஈரான் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஈரான் அரசின் ஊடகப் பேச்சாளர் பாத்திமா மொஹஜெரானி, ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ நோவோஸ்டி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் பின்வரும் விபரங்களை வெளியிட்டுள்ளார். தற்போதுவரை ஏற்பட்டுள்ள சேதங்கள் சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது ஒரு ஆரம்பக்கட்ட மதிப்பீடு மட்டுமே என்றும், முழுமையான […]