Other News

ரயிலில் பாய்ந்து உயிர்மாய்த்த குடும்பஸ்தர்! யாழில் துயரம்

யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையை சேர்ந்த 42 வயதுடைய என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகால சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் கச்சேரிக்கு முன்பாக உள்ள ரயில் கடவையடிக்கு சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி […]

யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை – ஐவர் கைது

திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தெரியவருகையில் – யாழ்.இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர் […]

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்தது. நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தமது கடமையையும், பொறுப்பையும் அவர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவித்தே, இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது. அதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று […]

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பு

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (10) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (09) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.2,000 அதிகரித்து 378,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 378,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. […]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்தக் குற்றப்பத்திரிகைகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இன்று பிரதிவாதிகளிடம் கையளிக்கப்பட்டன. குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் ஒவ்வொருவரையும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிபதி […]

சிபிஐ தலைவர் மரணம்.. வைகோ கண்ணீர் அஞ்சலி

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் இரெ. இடும்பையன் வயது மூப்பின் காரணமாக நேற்று (மே 30) காலமானார். அவரது இல்லத்திற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடும்பையன் உடலுக்கு மாலை அணிவித்து, கண்ணீர்விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இறந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், விபத்தில் படுகாயமடைந்த சஷ்டிகனுக்கு சிறப்பு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் தேர் நகர்ந்தபோது அதன் பின்பகுதியில் நின்றிருந்த ஹர்ஷவர்தன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மக்களுக்கு நன்றி சொல்லாத லீமா ரோஸ் ?

திருச்சி லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற லீமா ரோஸ், வெற்றி பெற்று ஒரு மாதமாகியும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சொந்த தொகுதிக்கு வரவில்லை என கட்சியினர் குமுறுகின்றனர். கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெக அமைச்சரவையில் உள்ள ஆதவ் அர்ஜூனாவின் மாமியாரும் ஆன இவர், தேர்தல் முடிவுக்குப் பிறகு சென்னை சென்று எஸ்.பி.வேலுமணி அணியில் செயல்பட்டதாகவும், பின்னர் அந்த அணி எடப்பாடி அணியுடன் இணைந்த […]

விஜய் எனக்கு துணை முதலமைச்சர் பதவி கூட தந்திருப்பார் – பிரேமலதா

“நான் கேட்டிருந்தால், விஜய் எனக்கு துணை முதலமைச்சர் பதவி கூட தந்திருப்பார் என தேமுதிக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே 31) நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், ‘நாம் நினைத்திருந்தால் விஜய்யைப் பார்த்திருக்க முடியாதா? அமைச்சர் பதவிக்காக ஓடுகிறார்கள். ஆனால் நான் நினைத்திருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார். ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சி தேமுதிக […]

முதலமைச்சர் மக்கள் சேவை நண்பர் திட்டம்

முதலமைச்சர் மக்கள் சேவை நண்பர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து மற்றும் நகர உள்ளாட்சிகளில் 5 லட்சம் இளைஞர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அந்த பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்றும் அவர்கள் மாநில அரசின் சேவை மற்றும் திட்டங்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்வார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறித்து பட்ஜெட் கூட்டத்திற்கு […]