முதலமைச்சர் விஜயை மிரட்டும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 20ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்ட மார்கண்டேயன், தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறையில் அவரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், வழக்கு தொடர்பாகவும், தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Other News
‘ஜனநாயகன்’ படத்தை இணையத்தில் பார்த்த வாலிபருக்கு முன்ஜாமீன்
இணையதளத்தில் லீக் ஆன ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்ததாக, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் மீது கடந்த ஏப்.3-ம் தேதி காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மனுதாரர் படத்தை இணையதளத்தில் பார்த்தார் என்பதை தவிர வேறு எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி தனது […]
கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது?
இந்தியாவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன என்பது குறித்து கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தகவல் வெளியிட்டுள்ளார். இதன்படி பஞ்சாப்பில் பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் குறித்து தமது கட்சி ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற நிலையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நீட் […]
பதவியை ராஜினாமா செய்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி இயக்கத்தினர் 35 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் மத்திய அரசு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் உரிய […]
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,905 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த மாதத்தில் நேற்று (24) வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 25,530 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவாக 17,135 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 16,140 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,574 […]
‘Bitchat’ செயலியை முடக்க நடவடிக்கை: மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தப் பகுதியில் இணையச் சேவைகள் முடக்கப்பட்ட போதிலும், மாணவர்கள் பயன்படுத்தி வரும் ‘Bitchat’ செயலியை முடக்குவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இணைய வசதி அல்லது தொலைத்தொடர்பு கட்டமைப்பு சேவை இல்லாமலேயே, புளூடூத் இணைப்பைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் தொழில்நுட்ப வசதியை இந்த Bitchat செயலி கொண்டுள்ளது. இணையச் சேவை முடக்கப்பட்ட நிலையிலும், மாணவர்கள் இந்த செயலி வாயிலாகத் தொடர்ந்து […]
ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்!
தாம் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை தமிழக முதல்வர் விஜய் இன்று மீண்டும் பார்க்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த திரையரங்கில் அவர் ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்கவுள்ளார் என்ற விடயத்தை தமிழக ஊடகங்கள் தெரிவிக்கவில்லை. தமது இறுதித் திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை ஏற்கனவே விஜய் அதிகாரிகள் சகிதம் பார்த்திருந்தார். சென்னை அடையாறில் உள்ள திரைப்படக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்புத் திரையிடலில், தனது பெற்றோர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரசுத் தலைமைச் செயலக […]
விரைவு நீதிமன்ற அறிவிப்பு கண் துடைப்பு… மாணிக்கம் தாகூர்
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே 13.9 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், NTA அமைப்பு முற்றிலும் தோற்றுவிட்டதாகக் கூறினார். மத்திய கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் மாணவர்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடியா? – அமைச்சர் நிர்மல் குமார்
தமிழகத்தில் மின் கட்டண கணக்கீட்டில் எந்த குழப்பமும் இல்லை என்றும், 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளார். ரீடிங்கில் குளறுபடி உள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து மறு கணக்கீடு செய்யப்பட்டதில் எந்த தவறும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், மின்கட்டண உயர்வு குறித்த புகார்கள் அடிப்படையற்றவை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ராமதாஸ் அறிவிப்பு
தனது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று முதல் அரசியல் துறவறம் (ஓய்வு) மேற்கொள்ளப்போவதாக திடீரென அறிவித்துள்ளார். இனி பாமக கட்சி விவகாரங்களில் தலையிடப் போவதில்லை என்றும், முழு அரசியலையும் அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “இனி என்னைப் பார்க்க வருபவர்கள் அரசியல் பேசாமல் நலம் விசாரித்தால் மட்டும் போதும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
